ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மதுசூதனன், மருதுகணேஷ், கங்கை அமரன், டிடிவி தினகரன் உள்பட 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், தீபா உள்ளிட்ட 82 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 45 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால், அவரது ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, தீபா பேரவை, பாஜக, தேமுதிக, நாம்தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் களத்தில் பலமுனை போட்டி நிலவும் நிலையில் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment